உள்ளூர் செய்திகள்

தானாகுளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-02-20 09:19 GMT   |   Update On 2023-02-20 09:19 GMT
  • விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.
  • விபத்து குறித்து மெளலியின் தந்தை குட்டி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

பெரியபாளையம்:

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மௌலி (வயது23) ஆவார். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் இதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் அஜய் (வயது24) என்பவரை அழைத்துக்கொண்டு பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். ஜனப்பன்சத்திரம்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் தானாகுளம் என்ற பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் மெளலி மற்றும் அஜய் தவறி கீழே விழுந்தனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாடியநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே மௌலி இறந்து விட்டதாக கூறினர். அஜய்க்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து மெளலியின் தந்தை குட்டி பெரியபாளையம் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News