உள்ளூர் செய்திகள்

கந்துவட்டி கேட்டு மிரட்டிய தாய்-மகன் கைது

Published On 2022-06-30 13:38 IST   |   Update On 2022-06-30 13:38:00 IST
  • கந்துவட்டி நபரின் வீட்டில் சோதனையிட்டதில் 25 அடமான பத்திரங்கள், 8 உத்திரவாத பத்திரங்கள், தகவல் எதுவும் நிரப்பப்படாத 11 பத்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
  • கந்துவட்டிக்கு பணம் கொடுத்த சோலையம்மாள், அவரது மகன் ஜெயவீரபாண்டியன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சீர்காழி:

சீர்காழி அருகே எடமணல் ஆமப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (35). இவர் மயிலாடுதுறை எஸ்.பி. நிஷாவிடம், கந்துவட்டிக்கு பணம் பெற்று மனவேதனை அடைந்து வருவதாக புகார் அளித்திருந்தார். அதனையடுத்து எஸ்.பி.நிஷா உத்தரவின்படி சீர்காழி போலீசில் வாசுதேவன் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், மேலும் கந்துவட்டி நபரின் வீட்டில் சோதனை இட சீர்காழி நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.அனுமதி உத்தரவின்படி சீர்காழி டி.எஸ்.பி. லாமெக், இன்ஸ்பெக்டர் மணிமாறன், எஸ்.ஐ. சீனிவாசன், எஸ்.எஸ்.ஐக்கள் செல்வராஜ், செந்தில் ஆகியோர் கந்துவட்டிக்கு பணம் கொடுத்த சீர்காழி அடுத்த வழுதலைக்குடி அக்ரஹார மேட்டுதெருவை சேர்ந்த சோலையம்மாள் (65) என்பவரது வீட்டில் சோதனையில் ஈடுப்பட்டனர்.

சோதனையில் வீட்டில் 25 அடமான பத்திரங்கள், 8 உத்திரவாத பத்திரங்கள், தகவல் எதுவும் நிரப்பப்படாத 11 பத்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கந்துவட்டிக்கு பணம் கொடுத்த சோலையம்மாள், அவரது மகன் ஜெயவீரபாண்டியன் (40) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் எத்தனை பேருக்கு இதுபோன்று கந்துவட்டிக்கு பணம் கொடுத்து எழுதி வாங்கியுள்ளனர் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கந்துவட்டிக்கு பணம் கொடுத்த தாய், மகன் கைதான சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News