உள்ளூர் செய்திகள்

பி.டி.ஓ. அலுவலகத்தில் மகனுடன், தாய் தர்ணா

Published On 2023-08-26 09:58 GMT   |   Update On 2023-08-26 09:58 GMT
  • குப்பைகள் அனைத்தும் இவரின் வீட்டு அருகே கொட்டப்பட்டு எரிக்கப் பட்டு வருகிறது.
  • பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்ப டாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

கடத்தூர்,  

தருமபுரி மாவட்டம், கடத் தூர் ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்ட சில்லார அல்லி கிராம பஞ்சாயத்து பகுதி யில் வசித்து வருப வர் இந்தி ராணி (வயது 42). இவரது கணவர் சரவணன். அரசு போக்கு வரத்து கழகத் தில் டிரை வராக இருந்து இறந்த நிலையில் தனது இரண்டு மகன்கள் ஆனந்த், ஆதித்யா ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சில்லார அள்ளி கிராம பஞ்சாயத்து பகுதியில் இருந்து சேகரிக் கப்படும் குப்பைகள் அனைத்தும் இவரின் வீட்டு அருகே கொட்டப்பட்டு எரிக்கப் பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் குடியிருக்க முடியாத சூழ்நிலை யாலும், புகையால் ஏற்பட்டு வரும் சுவாச பாதிப்பால் பாதிக்கப் பட்டு உள்ளார்.

குடியிருக்க முடியாத சூழ்நிலையில் கடந்த 3 ஆண்டு களாக தருமபுரி கலெக்டர் அலுவலகம் கடத்தூர் பி.டி.ஓ ஆபீஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்ப டாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் விதவைப் பெண் இந்தி ராணி, அவரது மகனுடன் கடத்தூர் பி.டி.ஓ ஆபிசில் திடீர் தர்ணா வில் ஈடுபட்ட தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதிய சாப்பாடு ஒட்டலில் வாங்கி வந்து பீ.டி.ஒ ஆபிசில் சாப்பிட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தன்னு டைய வீட்டு அருகில் கொட்டப் பட்டுள்ள குப்பை களை அகற்றும் வரை பீ.டி.ஓ அலுவலகத்தில் தங்கி இருப்பேன் என கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.

இரவு சுமார் 7 மணி ஆன நிலையில் காவல் துறையினர் வந்து தர்ணாவில் அமர்ந்திருந்த பெண்ணிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மகனுடன் 5 மணி நேரம் பீ.டி.ஓ அலுவலகத்தில் அமர்ந்து விதவைபெண் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News