உள்ளூர் செய்திகள்
கும்மிடிப்பூண்டியில் குழந்தைகளுடன் தாய் மாயம்
- சித்ரா நேற்று காலை தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார்.
- கவரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை தெலுங்கு காலனி பகுதியை சேர்ந்தவர் சித்ரா (26). இவர் நேற்று காலை தனது குழந்தைகள் சஜித் (5), சனுஜா (3), ஆகியோருடன் தனது தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் இதுவரை தாய் வீட்டுக்கு செல்லவில்லை. அவர் மாயமாகிவிட்டார்.
இதுகுறித்து கவரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.