உள்ளூர் செய்திகள்
குழந்தையை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை
- தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் பலரிடம் கடன் கேட்டதாக கூறப்படுகிறது.
- மகன் ஹர்சனுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை புதுநகரை சேர்ந்தவர் ஜான்ராஜ். கூலி தொழிலாளி.
இவரது மனைவி மாலதி (வயது 22). இவர்களுக்கு 2 வயதில் ஹர்சன் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் பல்வேறு சுயஉதவி குழுவிற்கு மாலதி பணம் செலுத்த வேண்டிய நிலையில் தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் பலரிடமும் கடன் கேட்டதாக கூறப்படுகிறது.
கேட்ட பணம் கிடைக்காத காரணத்தினால் மனமுடைந்த மாலதி மகன் ஹர்சனுக்கு விஷத்தை கொடுத்து கொன்று விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. பிரபாகர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
மேலும் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.