உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே மொபட் திருட்டு

Published On 2022-09-24 13:18 IST   |   Update On 2022-09-24 13:18:00 IST
  • சங்கராபுரம் அருகே மொபட் மர்ம நபர்களால் திருட்டுப்பட்டது.
  • சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே ராமராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி ஆனந்தி (வயது 27). இவர் தனது மொபட்டை கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கி அருகே நிறுத்திவிட்டு சென்றார். பின் திரும்பி வந்துபார்த்தபோது, மொபட்டை காணவில்லை. அதனை மர்மநபர் திருடிச்சென்று உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார

Tags:    

Similar News