உள்ளூர் செய்திகள்

முதல்வர் ஸ்டாலின்

சாகித்ய அகாடமி விருது பெற்ற மு.ராஜேந்திரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Published On 2022-12-23 02:21 IST   |   Update On 2022-12-23 02:26:00 IST
  • எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது.
  • காளையார் கோவில் போரை முன் வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் காளையார் கோவில் போரை முன்வைத்து எழுதப்பட்ட காலா பாணி நாவலுக்கு நடப்பாண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் இந்த நாவலை எழுதி உள்ளார்.

இந்நிலையில் எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை எனும் வரலாற்றுப் புதினத்துக்காக சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வாகியிருக்கும் மு.ராஜேந்திரனுக்கு என் பாராட்டுகள். இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் வீரம் தோய்ந்த வரலாறு மேலும் வெளிச்சம் பெறட்டும் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள கே. நல்லதம்பிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News