உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே மின்னொளி கபடி போட்டி

Published On 2023-06-27 14:28 IST   |   Update On 2023-06-27 14:28:00 IST
  • போட்டியில் 100-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் கலந்து கொண்டனர்.
  • வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை, பரிசு தொகை வழங்கப்பட்டது.

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்- மீனாட்சிபுரம் கிராமத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு வேங்கை கபடி குழு மற்றும் மீனாட்சிபுரம் ஊர் பொதுமக்கள் இணைந்து மாவட்ட அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டியினை நடத்தினர். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் வேங்கை கபடி அணியினர் வெற்றி பெற்று முதல் பரிசு ரூ. 15 ஆயிரத்தை தட்டி சென்றனர். முதல் பரிசை பாலாஜி நயினார் நாகேந்திரன் ஸ்பான்சர் செய்திருந்தார். பரிசு வழங்கும் விழாவில் தொழிலதிபர் விஜய் என்கிற சண்முக நயினார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசு தொகையினை வழங்கினார்.

விழாவில் தென்காசி மாவட்ட பா.ஜனதா இளைஞரணி செயலாளர் சரவணமுருகன், பா.ஜனதா மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் விவேக், பொன்னுதுரை, பொன் செல்வன், ஜெகன், பொன்னுசாமி, நாராயணன், ராமு, ராஜா மற்றும் திப்- மீனாட்சிபுரம் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News