உள்ளூர் செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 2-ந் தேதி கோவை வருகை

Published On 2023-11-24 09:31 GMT   |   Update On 2023-11-24 09:31 GMT
  • தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
  • சேலத்தில் நடைபெற உள்ள மாநில இளைஞர் அணி மாநாட்டிற்கான முன்னோட்டமாக அமையும்.

கோவை,

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அடுத்த மாதம் 2-ந் தேதி கோவை வருகிறார்.

பீளமேடு கொடிசியா மைதானத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகிறார். சேலத்தில் டிசம்பர் 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டை விளக்கும் விதமாக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் இந்த செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது.

இந்த செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் கொடிசியா மைதானத்தில் தொடங்கி உள்ளது. அந்த பணிகளை அமைச்சர் முத்துசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, கோவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் டிசம்பர் 2-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் 20 ஆயிரம் இளைஞர் அணியினர் கலந்து கொள்ள உள்ளனர். அதற்கான பணிகளை மாவட்ட செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணியினர் தொடங்கி உள்ளனர்.

இந்த கூட்டம் சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டிற்கான முன்னோட்டமாக அமையும். சேலத்தில் நடைபெற உள்ள மாநில இளைஞர் அணி மாநாட்டிற்கான முன்னோட்டமாக அமையும். சேலத்தில் நடைபெறும் மாநாடு இதுவரை நடந்திராத மாநாடாக இருக்கும். அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News