உள்ளூர் செய்திகள்

அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை- அமைச்சர் ரகுபதி

Published On 2023-04-17 03:18 GMT   |   Update On 2023-04-17 03:18 GMT
  • அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வது கிடையாது.
  • அண்ணாமலை கூறுவது போன்று தமிழகத்தில் ரணகளம் எதுவும் ஏற்படபோவதில்லை.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ''பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்து அவர் பதில் அளிக்கையில், "அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வது கிடையாது. அவரை நாங்கள் ஒரு ஜோக்கராகதான் பார்க்கிறோம். அண்ணாமலை கூறுவது போன்று தமிழகத்தில் ரணகளம் எதுவும் ஏற்படபோவதில்லை. வேறு எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம்'' என்றார்.

Tags:    

Similar News