உள்ளூர் செய்திகள்

மருத்துவ உதவி தொகையை முன்னாள் எம்.பி. சவுந்திரராஜன் வழங்கிய காட்சி.

மதுரை மாநாடு சென்று திரும்பிய போது விபத்தில் சிக்கிய அ.தி.மு.க. தொண்டருக்கு மருத்துவ உதவி தொகை

Published On 2023-08-23 09:04 GMT   |   Update On 2023-08-23 09:04 GMT
  • திருமங்கலம் பகுதியில் அ.தி.மு.க. தொண்டர் சுயம்புலிங்கம் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.
  • தற்போது சுயம்புலிங்கம் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வள்ளியூர்:

மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாட்டில் நெல்லை மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விபத்தில் சிக்கி காயம்

இந்த நிலையில் மாநாடு முடிவடைந்து வரும் வழியில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் கூடங்குளத்தை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் சுயம்புலிங்கம் என்பவர் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.

காயம் அடைந்த அவருக்கு மதுரை திருமங்கலத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

உதவித்தொகை

தற்போது கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு முன்னாள் எம்.பி.யும், நெல்லை மாவட்ட பொருளாளருமான சவுந்திரராஜன் மருத்துவ மனைக்கு நேரில் சென்று சுயம்புலிங்கத்திற்கு ஆறுதல் தெரிவித்து மருத்துவ உதவி தொகையை வழங்கினார்.

உடன் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலா ராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ராதாபுரம் ஒன்றிய பொருளாளர் துரை ராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுரேஷ் குமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

Tags:    

Similar News