உள்ளூர் செய்திகள்

மேயர் சத்யா ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.

ஓசூரில் மேயர் சத்யா திடீர் ஆய்வு

Published On 2023-05-05 15:20 IST   |   Update On 2023-05-05 15:23:00 IST
  • சக்தி நகர், ராகவேந்திரா காலனி உள்ளிட்ட பகுதிகளில் மாநகர மேயர் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
  • சாக்கடை கால்வாய், சாலை, குடிநீர் வசதிகள் ஒவ்வொரு பகுதியாக செய்து முடிக்கப்படும் என உறுதியளித்தார்

கிருஷ்ணகிரி,

ஒசூர் மாநகராட்சி, 7,8 வது வார்டுக்குட்பட்ட மூவேந்தர் நகர், ஆவலப்பள்ளி அட்கோ, ஜெ.ஜெ.,நகர், ரெயின்போ கார்டன், சக்தி நகர், ராகவேந்திரா காலனி உள்ளிட்ட பகுதிகளில் மாநகர மேயர் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அப்பகுதி மக்களின் சாக்கடை கால்வாய், குடிநீர், சாலை உள்ளிட்ட குறைகளை கேட்டறிந்து, அவற்றை மனுக்களாக பெற்றுக்கொண்டார்.ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்படும் என உறுதியளித்த அவர், சாக்கடை கால்வாய், சாலை, குடிநீர் வசதிகள் ஒவ்வொரு பகுதியாக செய்து முடிக்கப்படும் என உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது, துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, 8-வது வார்டு உறுப்பினர் சீனிவாசலு உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News