உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே நீட் பயிற்சி பெறும் மாணவி மாயம்

Published On 2023-04-11 09:01 GMT   |   Update On 2023-04-11 09:01 GMT
  • பைரவி (வயது 17) பிளஸ் -2வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிலையில்தற்போது மாணவி நீட் பயிற்சி பெற்று வருகிறார்
  • வீட்டிலிருந்து வந்த மாணவி பைரவி திடீரென மாயமாகியுள்ளார்

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே உள்ள எரவார் கிராமத்தை சேர்ந்த ரவி மகள் பைரவி (வயது 17) இவர் அருகிலுள்ள பெரிய சிறுவத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் -2வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிலையில்தற்போது மாணவி நீட் பயிற்சி பெற்று வருகிறார் எனகூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டிலிருந்து வந்த மாணவி பைரவி திடீரென மாயமாகியுள்ளார். இது சம்பந்தமாக அவரது பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத பட்சத்தில் இது சம்பந்தமாக மாணவியின் தந்தை ரவி சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News