உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் சிறுமி மாயம்

Published On 2023-04-26 07:03 GMT   |   Update On 2023-04-26 07:03 GMT
  • பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ்-2 படித்து முடித்து விட்டு கடலூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததார்.
  • பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கா ததால் சிறுமியின் தாயார் புதுப்பே ட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ்-2 படித்து முடித்து விட்டு கடலூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததார். இவர் கடந்த 24-ந்தேதி வேலைக்கு சென்றவர் நள்ளிரவு வரை வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கா ததால் சிறுமியின் தாயார் புதுப்பே ட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.   புகாரில், அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருணா ச்சலம் (24) என்பவர் கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெ க்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வருகிறார்.

Tags:    

Similar News