உள்ளூர் செய்திகள்

கல்லூரி சென்ற மாணவி மாயம்

Published On 2022-08-01 09:48 GMT   |   Update On 2022-08-01 09:48 GMT
  • கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரி செல்வதாக காலை வீட்டை விட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.
  • இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் காணாமல் போன மாணவியை தேடி வருகிறார்.

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள ஆய் கவுண்டம் பாளையத்தில் தறி தொழிலாளியாக வேலை செய்து வருபவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் கோபியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்து வருகிறார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரி செல்வதாக காலை வீட்டை விட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. இவரது தாய் மற்றும் தந்தை உறவினர்கள், நண்பர்கள் வீடு மற்றும் பல இடங்களில் தேடி பார்த்தும் மகள் கிடைக்காததால் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் காணாமல் போன மாணவியை தேடி வருகிறார்.

Tags:    

Similar News