உள்ளூர் செய்திகள்

3 பெண்களை திருமணம் செய்த தொழிலாளி திடீர் தற்கொலை

Published On 2022-06-27 07:51 GMT   |   Update On 2022-06-27 07:51 GMT
  • மேச்சேரி அருகே 3 பெண்களை திருமணம் செய்த தொழிலாளி திடீர் தற்கொலை செய்துகொண்டார்.
  • சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள கொப்பம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 70). இவருக்கு 3 மனைவிகள். எனினும் தற்போது அவர்களுடன் சேர்ந்து வாழாமல் தனியாக வசித்து வந்தார்.

இவருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் தனியாக வசித்து வந்த சேட்டு கடந்த 22-ந்தேதி வீட்டின் அருகே பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்பு அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சேட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து சேட்டுவின் சகோதரி பழனியம்மாள் மேச்சேரி போலீசில் புகார் செய்தார். மேச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News