உள்ளூர் செய்திகள்

திருமணமான இளம்பெண் கடத்தல்

Published On 2022-12-17 10:25 GMT   |   Update On 2022-12-17 10:25 GMT
  • வீட்டை விட்டு வெளியே சென்ற சுரேகா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
  • சந்தோஷ்குமார் என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக ராமமூர்த்தி சூளகிரி போலீசில் புகார் செய்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி.இவரது மனைவி சுரேகா (வயது 21).

கடந்த 12- ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சுரேகா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

சுரேகா பற்றி பல்வேறு இடங்களில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் திம்மண்ணப ள்ளிப்பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக ராமமூர்த்தி சூளகிரி போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சுரேகாவையும், அவரை கடத்தியதாக கூறப்படும் சந்தோஷ்குமாரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News