உள்ளூர் செய்திகள்

மாரத்தான் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-10-22 14:26 IST   |   Update On 2022-10-22 14:26:00 IST
  • சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் பேரணி நடந்தது.
  • சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரி நடைபெற்றது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கேத்தியில் செயல்பட்டு வரும் சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் இன்று ஐ.ஜி.இ.என் கிளப்புடன் இணைந்து மாரத்தான் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை கல்லூரி முதல்வர் பி.டி.அருமைராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரியும், தண்ணீர் மற்றும் உணவு வீணாவதை தடுப்பதை வலியுறுத்தியும் எல்லநள்ளியில் இருந்து கல்லூரி வரை பேரணி நடைபெற்றது. இதில் துணை முதல்வர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

Tags:    

Similar News