உள்ளூர் செய்திகள்

அமைச்சர் மெய்யநாதன்

மஞ்சப்பை திட்டத்தால் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது - அமைச்சர் பேட்டி

Published On 2022-07-02 07:50 GMT   |   Update On 2022-07-02 07:50 GMT
  • தமிழகத்தில் நீர்நிலை பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
  • கடந்த ஓராண்டில் 1,175 டன் அளவிலான பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்ப–ட்டு 177 கம்பெனிகள் மூடப்பட்டுள்ளது.

வல்லம்:

தஞ்சை அருகே வல்லத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக 34-வது ஆண்டுவிழா நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், திராவிடர் கழகத் தலைவருமான கி. வீரமணி தலைமை வகித்தார். இதில் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தஞ்சை மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேலுசாமி வரவேற்றார். பதிவாளர் ஸ்ரீவித்யா நன்றி கூறினார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதன் பின்னர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் நீர்நிலை பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் மண்ணை மலடாக்கும் திட்டமான ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ எடுக்கும் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என முதல்-அமைச்சர் தெளிவாக அறிவித்து–ள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் தொழிற்சாலைகள் அமைக்க முடியாது.

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 1,175 டன் அளவிலான பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்ப–ட்டுள்ளது. பிளாஸ்டிக் தயாரிக்கும் 177 கம்பெனிகள் மூடப்பட்டுள்ளது. ரூ.105 கோடி அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தினால் தமிழகத்தில் 20 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடு மக்களிடம் குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து வீரமணி அளித்த பேட்டியில், அ.தி.மு.க.வில் தற்போது ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா அல்லது முக்கோண தலைமையா என்று பேசுவதை தாண்டி, முதலில் தாங்கள் அடமானம் வைத்த பொருளை மீட்க வேண்டும். முதலில் தங்களுடைய தலைமையை உறுதி செய்யும் முன்பாக, தங்களுடைய கட்சியை மீட்க வேண்டும். அதுதான் தமிழ் மானம் விரும்பக் கூடியவர்களும், தாய் கழகத்துக்கும் உள்ள விருப்பமாகும் என்றார்.

Tags:    

Similar News