உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி பூங்காவில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-05-05 15:21 IST   |   Update On 2023-05-05 15:21:00 IST
  • தொடர்ந்து உதவி கலெக்டர் தலைமையில் அனைவரும் பசுமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
  • அணை பூங்கா வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை பூங்காவில் மீண்டும் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நீர், காற்று மற்றும் நிலம், பிளாஸ்டிக் மாசில்லாத தமிழகத்தை உருவாக்க, அணை பூங்காவில் உள்ள கழிவு குப்பைகளை அகற்றும் பணி நடந்தது. இந்த பணியை கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு தொடங்கி வைத்தார். தொடர்ந்து உதவி கலெக்டர் தலைமையில் அனைவரும் பசுமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஆணை பூங்கா வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழச்சியில் துணை கலெக்டர் (பயிற்சி) தாட்சாயிணி, தாசில்தார் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News