உள்ளூர் செய்திகள்

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.

அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

Published On 2023-04-09 10:05 GMT   |   Update On 2023-04-09 10:05 GMT
  • இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து விடுபடாமல் பள்ளியில் சேர்க்க வேண்டும்.
  • கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பாபநாசம்:

பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி முத்துலட்சுமி வரவேற்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை வகித்து இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து விடுபடாமல் பள்ளியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர் பிரதிநிதி செல்வகுமார், இல்லம் தேடி கல்வி பொறுப்பாளர் கார்த்திகா பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ரமா, வளர்மதி, சித்ரா, அனுராதா, செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News