உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Published On 2023-09-16 14:26 IST   |   Update On 2023-09-16 14:26:00 IST
  • மன்னன்பெருமாள் என்பவர் முத்துசெல்வியை ஆபாசமாக பேசினார்.
  • ஆபாசமாக பேசிய மன்னன் பெருமாளை முத்துசெல்வி பெற்றோர் கண்டித்தனர்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், ராஜபுதூர் தெருவை சேர்ந்த சுப்பையா மகள் முத்துசெல்வி (வயது 35). கடந்த 5 மாதங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த மன்னன்பெருமாள் (43) என்பவர் முத்துசெல்வியை ஆபாசமாக பேசினார்.

இதனை அவர் தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் மன்னன் பெருமாளை கண்டித்தனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முத்துசெல்வியை, மன்னன் பெருமாள் மீண்டும் ஆபாச மாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப் பட்டது. நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மன்னன் பெருமாளை கைது செய்தனர்.

Tags:    

Similar News