உள்ளூர் செய்திகள்

ஜாமீனில் வந்து வெளிநாட்டுக்கு தப்பி சென்றவர் கைது

Published On 2022-09-23 07:11 GMT   |   Update On 2022-09-23 07:11 GMT
  • ஜாமீனில் வந்து வெளிநாட்டுக்கு தப்பி சென்றவர் கைது செய்யப்பட்டார்.
  • விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாடு தப்பிச் சென்றார்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்ட க்குடி கடைவீதி தெரு வைச் சேர்ந்தவர் ராம லிங்கம் (வயது48). இவருக்கும் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த ரேணுகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமண மானது. இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரேணுகா இறந்தார். அவரது இறப்பு வரதட்சணை கொடுமை காரணமாக இறந்து விட்டார் என கூறி அவரது சகோதரர் ராதா கிருஷ்ணன் புகார் செய்தார்.

அதன்பேரில் இது குறித்து விருத்தாச்சலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்தனர். பின் ஜாமீனில் வெளிவந்த ராம லிங்கம் தொடர்ந்து வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாடு தப்பிச் சென்றார். தலைமறைவான ராம லிங்கம் நேற்று மீண்டும் தமிழகம் திரும்புவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது நேற்று சென்னை ஏர்போர்ட்டுக்கு சென்ற போலீசார் ராமலிங்கத்தை கைது செய்தனர்.

Tags:    

Similar News