உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல்

Published On 2022-06-28 08:23 GMT   |   Update On 2022-06-28 08:23 GMT
  • மதுரை-மேலூர் நெடுஞ்சாலையில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
  • இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சூரகுண்டு கிராமத்தில் உள்ள 7-வது வார்டு பகுதியில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்தித் தர மறுப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர்.

இதனால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி குடிநீருக்காக அலையும் சூழல் உருவாகி வருவதாகவும், மேலும் முறையான மின்சாரம் தங்கள் பகுதிக்கு வழங்கவில்லை, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முறையாக வழங்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

குடிநீர் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த 100-க்கு மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மதுரை - மேலூர் சாலையில் இன்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசந்தர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய கஜேந்திரன், ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார்போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்று மேலூர் யூனியன் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். நீண்ட நேரம் சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News