உள்ளூர் செய்திகள்

கடைமுன்பு இறந்து கிடந்த முதியவர் யார்?

Published On 2022-08-01 09:07 GMT   |   Update On 2022-08-01 09:07 GMT
  • கடைமுன்பு இறந்து கிடந்த முதியவர் யார்? என்பது தெரியவில்லை.
  • மேல்மதுரை கிராம உதவியாளர் கொடுத்த புகாரின்பேரில் திலகர்திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மதுரை

மதுரை மேலவெளிவீதி பிரேமாவிலாஸ் கடைமுன்பு நேற்று (31-ந் தேதி) காலை 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. அடிவயிற்றின் இடதுபுறம் கருப்பு மச்சமும், வலது முன்னங்காலில் பழைய காயத்தழும்பும் காணப்படுகிறது.

முதியவரின் உடல் மதுரை அரசு மருத்துவனை சவக்கிடங்கில் உள்ளது. இதுகுறித்து மேல்மதுரை கிராம உதவியாளர் கொடுத்த புகாரின்பேரில் திலகர்திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News