உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் அடையாளம் தெரியாத பெண் பலி

Published On 2022-12-04 13:18 IST   |   Update On 2022-12-04 13:18:00 IST
  • வாகன விபத்தில் அடையாளம் தெரியாத பெண் பலியானார்.
  • இன்ஸ்பெக்டர் சந்திரன்,சப்-இன்ஸ்பெக்டர் ஞானபிரபாகரன் ஆகிேயார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அவனியாபுரம்

மதுரை அவனியாபுரம்-அருப்புக்கோட்டை சாலையில் செம்பூரணி ரோடு விலக்கு அருகே 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தார்.

அவரை அங்கிருந்தவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்தார்.

இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் சந்திரன்,சப்-இன்ஸ்பெக்டர் ஞானபிரபாகரன் ஆகிேயார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News