உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

Published On 2023-06-09 14:10 IST   |   Update On 2023-06-09 14:10:00 IST
  • அடையாளம் தெரியாத முதியவர் பிணமாக கிடந்தார்.
  • போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்

திருமங்கலம் நகரில் உள்ள சோழவந்தான் சாலையில் நேற்று 72 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிக்கிடந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News