லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் உள்பட 2 பேர் பலி
- மதுரை ரிங் ரோட்டில் நள்ளிரவில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
- மோட்டார் சைக்கிள் கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
மதுரை
மதுரை ரிங் ரோடு சாலையில் நேற்று நள்ளிரவில் கண்டெய்னர் லாரி ஒன்று மாட்டுத்தாவணி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் ஒரே மோட்டார் சைக்கிளில் சோளங்குருணி யைச்சேர்ந்த ஜெயமுருகன் மகன் ரஞ்சித் (வயது16) , கண்ணன் மகன் வீரசந்தானம் (18) உள்பட 3 பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர். மண்டேலா நகர் அருகே மோட்டார் சைக்கிள் கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். 3 பேரும் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ரஞ்சித், வீரசந்தானம் 2 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஒருவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரைஅரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பெருங்குடி வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கண்டெய்னர் லாரி டிரைவர் குறித்தும், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.