உள்ளூர் செய்திகள்

எதிரிகளை அச்சுறுத்த துப்பாக்கி வைத்திருந்த ரவுடி

Published On 2023-01-01 08:06 GMT   |   Update On 2023-01-01 08:06 GMT
  • எதிரிகளை அச்சுறுத்த துப்பாக்கி வைத்திருந்த ரவுடி ப்ற்றி பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன.
  • ரவுடி அலெக்சிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை கீழஅண்ணா தோப்பை சேர்ந்தவர் அலெக்ஸ் என்ற பெரிய அலெக்ஸ் (வயது 38). பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்கு கள் நிலுவையில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அவர் இட்லி கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அலெக்ஸ் வீட்டில் கைத்துப்பாக்கி இருப்பதாக திலகர்திடல் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அவரது வீட்டில் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தி னர்.

அப்போது அவரது வீட்டில் ஏர் பிஸ்டல் ரகத்தை சேர்ந்த கைத்துப்பாக்கி இருந்தது. அதனை போலீ சார் கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அது ஆளை கொல்லும் அள வுக்கு சக்தியுடைய துப்பாக்கி இல்லை என்பதும், விசையை அழுத்தினால் அதிக சத்தத்து டன் வெடிக்கும் சாதாரண துப்பாக்கி என்பதும் தெரிய வந்தது.அலெக்ஸ் சில ஆண்டு களுக்கு முன்பு தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் குருசாமியுடன் இருந்து உள்ளார். அப்போது தான் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

குருசாமி சிறைக்கு சென்றதும் திருந்தி வாழ்வது என முடிவெடுத்து அலெக்ஸ் இட்லி கடை நடத்தி வந்துள்ளார். ஏற்கனவே ரவுடியாக இருந்ததால் அவருக்கு மறைமுக எதிரிகள் இருப்ப தாக கூறப்படுகிறது. ஆகவே அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரவுடி அலெக்சி டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News