உள்ளூர் செய்திகள்

ஏடகநாத சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா

Published On 2023-02-08 07:41 GMT   |   Update On 2023-02-08 07:41 GMT
  • சோழவந்தான் அருகே ஏடகநாத சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது.
  • பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தன்று தெப்பத்திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து காலை தெப்பத்திற்கு வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை யில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜையும், சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

இரவு 9.30 மணிக்கு ஏலவார் குழலி-ஏடகநாத சுவாமி பிரியாவிடையுடன் பக்தர்கள் புடை சூழ அதிர்வேட்டுகள் முழங்க தெப்பம் மற்றும் ஊர் முழுவதும் உலா வந்து கோவிலை வந்தடைந்தனர். அப்போது "ஓம் நமச்சிவாயா" என்று பக்தர்கள் மனமுருக கோஷம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் சரவணன், அறங்காவலர் சேவுகன் செட்டியார், விழாக்குழு தலைவர் நடராஜன், பொருளாளர் மோகன், ராமச்சந்திரன், முத்தழகு, ஏடக தேவகுமார், மற்றும் திருவேடகம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News