உள்ளூர் செய்திகள்

குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் பெருக்கெடுத்து செல்லும் தண்ணீர்.

குழாய் உடைந்து ஆறு போல பெருக்கெடுத்த குடிநீர்

Published On 2022-08-10 09:25 GMT   |   Update On 2022-08-10 09:25 GMT
  • மதுரை அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
  • இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மதுரை

மதுரை வசந்த நகர் பகுதியில் மெயின் ரோட்டில் குழாய் உடைந்ததால் அந்த பகுதியில் ஆறு போல குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், முத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் செல்லும் பிரதான குழாய் வசந்த நகர் வழியாக செல்கிறது அந்த குழாயில் இன்று காலை திடீரென உடைப்பு ஏற்பட்டதால் மெயின் ரோட்டில் குடிநீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்வதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டது.இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குழாய் உடைப்பு காரணமாக பெருக்கெடுத்த தண்ணீர் வசந்த நகர் மெயின் ரோட்டில் இருந்து பழங்காநத்தம் சந்திப்பு வரை குளம் போல தேங்கியது இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டவுடன் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதிக அழுத்தம் காரணமாக உடைப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News