உள்ளூர் செய்திகள்

மதுரை ரெயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த முற்றுகை போராட்டத்தில் வெங்கடேசன் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Published On 2023-09-07 13:56 IST   |   Update On 2023-09-07 13:56:00 IST
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • கட்ட பொம்மன் சிலை அருகில் இருந்து பேரணியாக சென்று ெரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

மதுரை

மதுரை மாநகர் கம்யூனிஸ்டு சார்பில் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ரெயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடந்தது.

மதுரை மாவட்ட செய லாளர் கணேசன் தலைமை தாங்கினார். வெங்கடேசன் எம்.பி. போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில குழு உறுப்பினர் விஜய ராஜன் கலந்து கொண்டார். பெரியார் நிலையம் கட்ட பொம்மன் சிலை அருகில் இருந்து பேரணியாக சென்று ெரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

பெட்ரோல், டீசல். சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசிய சமையல் பொருட்களின் விலை உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம், பெரு முதலாளிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் தள்ளுபடி ஆகியவற்றை கண்டித்து போராட்டம் நடந்தது. மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், கவுன்சிலர்கள் குமரவேல், ஜென்னியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.

பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News