உள்ளூர் செய்திகள்

ஆட்டோவில் கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

Published On 2023-05-27 08:33 GMT   |   Update On 2023-05-27 08:33 GMT
  • ஆட்டோவில் கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • ஆட்டோவில் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவையும், வாள், கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுரை

திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.

அங்கு ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த திருநகர் நெல்லையப்பபுரம் மலைச்சாமி மகன் அஜய்(21), தனக்கன்குளம் கார்த்திகா நகர் பாலகிருஷ்ணன் மகன் கண்ணன்(32), தனக்கன்குளம் போஸ்ட் ஆபீஸ் தெரு மாரியப்பன் மகன் தீபக்குமார் (29) ஆகியோரை கைது செய்தனர். ஆட்டோவில் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவையும், வாள், கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News