உள்ளூர் செய்திகள்

கார் மோதி வாலிபர் சாவு

Published On 2023-04-24 13:57 IST   |   Update On 2023-04-24 13:57:00 IST
  • கார் மோதி வாலிபர் பலியானார்.
  • வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

மதுரை

மதுரை நாராயணபுரம் கேசவசாமி தெருவை சேர்ந்த காமராஜ் மகன் ஆனந்தபாண்டி(19). இவர் நேற்று நள்ளிரவு புது நத்தம் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். நாகனாகுளம் பகுதியில் வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது.

இதில் ஆனந்த பாண்டி படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய திருப்பாலை என்.ஓ.சி நகர், மார்கஸ் காபிரியேலிடம்(27) விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News