உள்ளூர் செய்திகள்

வாலிபர்கள் தற்கொலை

Published On 2023-09-27 09:04 GMT   |   Update On 2023-09-27 09:04 GMT
  • மதுரையில் வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
  • இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியி ருப்பை சேர்ந்தவர் செந்தா மரை கண்ணன் (வயது53).இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் அறை கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு கரையான் மருந்தை மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீரைத்துறை காமராஜர் புரம் ஜார்ஜ் ஜோசப் தெருவை சேர்ந்தவர் ராமர் (45). தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் பூச்சிமருந்தை தின்று மயங்கி கிடந்தார்.

உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து அவரது மனைவி நாகவல்லி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News