உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தற்கொலை

Published On 2022-09-12 07:16 GMT   |   Update On 2022-09-12 07:16 GMT
  • இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
  • பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை அருகே உள்ள குலசேகரன் கோட்டையை சேர்ந்த மண்டையன்-பஞ்சவர்ணம் தம்பதியின் மகள் கருப்பாயி (வயது 25). இவருக்கும் சின்ன பாலமேட்டை சேர்ந்த பிரபுவுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

2 குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த கருப்பாயி சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாயார் பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின் பேரில் பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News