உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-21 08:30 GMT   |   Update On 2023-06-21 08:30 GMT
  • தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • பா.ஜ.க. அரசை விரைவில் அகற்ற உறுதியேற்க வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

மதுரை

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் கே.அலாவுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் லூர்து, மாவட்டக்குழு உறுப்பினர் முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைேமயர் நாகராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

யூனியன் முஸ்லீம் லீக் மண்டல பொறுப்பாளர் அவ்தா காதர், சமய உரையாடல் குழு செயலர் பெனடிக் பர்ணபாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் விஜயராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும். அங்குள்ள மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும். பா.ஜ.க. அரசை விரைவில் அகற்ற உறுதியேற்க வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News