உள்ளூர் செய்திகள்

மதுரை தெற்குவாசல் நாடார் உறவின் முறை தலைவர் தொழிலதிபர் உத்தண்டன் காலமானார்

Published On 2023-10-21 08:37 GMT   |   Update On 2023-10-21 08:37 GMT
  • தெற்குவாசல் நாடார் உறவின் முறை தலைவர் தொழிலதிபர் உத்தண்டன் காலமானார்/
  • இறுதி சடங்குகள் நாளை நடக்கிறது

மதுரை

மதுரை தெற்குவாசல் நாடார் உறவின் முறை தலைவரும், காமராஜர் அறப்பணிக்குழு தலைவரும், தொழிலதிபருமான கே.உத்தண்டன் இன்று (21-ந் தேதி) காலமானார். அவருக்கு வயது 84.

மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நாடார் மகாஜன சங்க தலைவர் கரிக்கோல் ராஜ், உறவின் முறை பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர் சங்க பிரதிநிதிகள், தெற்குவாசல் ஜமாத் நிர்வாகி கமர்தீன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த உத்தண்டன் இறுதிச் சடங்கு நாளை (22-ந் தேதி) நடை பெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News