- தாயை அடித்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து தாயை அடித்துக்கொலை செய்த மாதவனை கைது செய்தனர்.
மதுரை
மதுரை மிளகரணை, நடுத்தெருவை சேர்ந்தவர் சாந்தி (வயது50). இவரது மகன் மாதவன் (25). இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு சற்று மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதிலும் நோய் முழுமையாக குணமாக வில்லை.
இந்தநிலையில் சாந்தி நேற்று அதிகாலை வீட்டில் இருந்தார். அப்போது மாதவன் பணம் கேட்டுள் ளார். அவருக்கு பணம் கொடுக்க சாந்தி மறுத்து விட்டார். இதில் ஆத்திர மடைந்த மாதவன் இரும்பு கம்பியை எடுத்து வந்து சாந்தியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த சாந்தி மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தாயை அடித்துக்கொலை செய்த மாதவனை கைது செய்தனர்.