உள்ளூர் செய்திகள்

குமரப்பட்டியில் சமுதாய கூடம் கட்டும் பணியை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

ரூ. 22 லட்சம் மதிப்பிலான சமுதாய கூடம்

Published On 2023-03-19 09:24 GMT   |   Update On 2023-03-19 09:24 GMT
  • ரூ. 22 லட்சம் மதிப்பிலான சமுதாய கூடத்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்
  • பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலூர்

மேலூர் கொட்டாம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 15லட்சம், பொது நிதியில் இருந்து ரூ.7லட்சம் என மொத்தம் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூட கட்டித்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதனைதொடர்ந்து குமரப்பட்டியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டும் பணியையும் பெரியபுள்ளன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கரு.முருகேசன் வரவேற்றார். கொட்டாம் பட்டி யூனியன் சேர்மன் வளர்மதி குணசேகரன் தலைமை தாங்கினார்.

மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் ராஜேந்திரன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், கொட்டாம்பட்டி முன்னாள் யூனியன் துணை சேர்மன் குலோத்துங்கன், பள்ளப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் வள்ளி மயில் முருகேசன், துணைத்தலைவர் நாகஜோதி, கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய பொருளாளர் சேதுராமன், விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் பொதியாடி, பள்ளபட்டி கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News