உள்ளூர் செய்திகள் (District)

பள்ளி ஆசிரியர் வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை

Published On 2023-07-05 08:22 GMT   |   Update On 2023-07-05 08:22 GMT
  • மதுரையில் பள்ளி ஆசிரியர் வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை நடந்தது.
  • மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மதுரை

மதுரை தெப்பக்குளம் கொண்டிதொழு தெருவை சேர்ந்தவர் பீமல் ராய் (32), பள்ளி ஆசிரியர். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 வயது குழந்தையும் உள்ளனர்.

நேற்று இரவு 8 மணியளவில் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி யடைந்த பீமல் ராய் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 26 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம், ஒரு கைக்கடி காரம் ஆகியவை திருடப் பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து தெப்பக்கு ளம் போலீசில் பீமல்ராய் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடு புகுந்து நகை, பணம் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

மதுரை தெற்கு வாசல் தெற்கு கிருஷ்ணன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் ரத்தினகிரி (54). சம்பவத் தன்று அதிகாலை இவரது வீட்டில் புகுந்த மர்மநபர் பீரோவில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டார். இது குறித்து தெற்கு வாசல் போலீசில் ரத்தினகிரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News