உள்ளூர் செய்திகள்

வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-02 07:21 GMT   |   Update On 2023-06-02 09:47 GMT
  • வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • தாசில்தார் மூர்த்தி முன்னிலை வகித்தார்.

வாடிப்பட்டி

திருச்சியில் வருவாய் ஆய்வாளர் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும், ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கிளை தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் மூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத் துணைத் தலைவர் துரைப்பாண்டி, மாவட்ட இணை செயலாளர் இங்கர்சால், வட்டத் தலைவர் சுப்புலட்சுமி, வட்ட மூத்த உறுப்பினர் கிருபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News