உள்ளூர் செய்திகள்

அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

Published On 2023-04-14 10:14 GMT   |   Update On 2023-04-14 10:14 GMT
  • அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் மூர்த்தி-தளபதி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  • ரவிசந்திரன், பொன்சேது, ஆர்.ஆர்.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை

சட்ட மேதை அம்பேத்காரின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை பாண்டியன் ஹோட்டல் அருகே அவுட் போஸ்டில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் மாவட்ட பொரு ளாளர் சோமசுந்தர பாண்டியன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் மருது பாண்டி, பகுதி செயலாளர் சசிகுமார், மண்டலத் தலைவர் வாசுகி, பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, கவுன்சிலர் நந்தினி, திருப்பாலை ராம மூர்த்தி, வாடிப்பட்டி கார்த்திக், வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செய லாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாநகர் மாவட்ட நிர்வாகி கள், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் வேலுச்சாமி குழந்தைவேலு, அக்ரி.கணேசன், சின்னம்மா, ஒச்சுபாலு, மூவேந்திரன், சுதன், ரவிசந்திரன், பொன்சேது, ஆர்.ஆர்.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News