உள்ளூர் செய்திகள்

சகதியில் சிக்கி தவித்த ரேசன் பொருள் லாரிகள்

Published On 2023-05-11 08:02 GMT   |   Update On 2023-05-11 08:02 GMT
  • மதுரையில் ரேசன் பொருட்கள் ஏற்றி வந்த லாரிகள் சகதியில் சிக்கி தவித்தன.
  • ரேசன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது.

மதுரை

மதுரை மாவட்டத்தில் 1200-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணை, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

பின்பு அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல் ரேசன் பொருட்கள் இந்த குடோனுக்கு கொண்டு வரப்படுகின்றன.

மதுரையில் தொடர்ந்து 10நாட்களுக்கு மேலாக மழை பெய்ததன் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் ேசதமடைந்து கிடக்கிறது. சுந்தரராஜபுரம் குடோன் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக மாறி சகதிக்காடாக இருக்கிறது.

இதனால் குடோனில் இருந்து ரேசன் பொருட்களை எடுத்துச் சென்ற லாரிகள் சகதியில் சிக்கின. அதிலிருந்து லாரிகளை வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த குடோனில் இருந்து தினமும் 20லாரிகளில் 300-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லப்படுகிறது.

சகதியில் லாரிகள் சிக்கி தவித்ததால் ரேசன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து சகதியில் சிக்கிய லாரிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags:    

Similar News