உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலை பணியாளர்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலை பணியாளர்கள்

Published On 2022-09-07 08:24 GMT   |   Update On 2022-09-07 08:24 GMT
  • மதுரை அருகே சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம், தர ஊதியம் வழங்க வேண்டி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை

மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர்கள் மாரியப்பன், ரவிசந்திரன், ஜீவானந்தம், சந்திரசேகர், மணிமாறன், மாவட்ட செயலாளர் சோலையப்பன், மாநில செயலாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம், தர ஊதியம் வழங்க வேண்டும்.

இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கைகளில் கொடியேந்தி கோஷமிட்டனர்.

Tags:    

Similar News