உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-10-02 13:08 IST   |   Update On 2023-10-02 13:08:00 IST
  • தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை மாவட்டம் கூடல் புதூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராஜா (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் தலைமை அதி காரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் தனக்கு பணிச்சுமை அதிக மாக இருப்பதாகவும், தற் கொலை செய்து கொள்ள லாம் என தோன்றுவதாகவும் நெருக்கமாகவர்களிடம் கடந்த சில நாட்களாக புலம்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் மனைவி, குழந்தைகளுடன் அவரது அக்கா வீட்டுக்கு சென்று இருந்தார். இதனால் வீட்டில் தனியாக இருந்த ராஜா சேலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ராஜாவின் தாய் ஷோபனா கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News