- சோழவந்தானில் பிரதோஷ விழா நடந்தது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. விழாவையொட்டி சனீஸ்வரன் லிங்கம் நந்திகேசுவரர் சிவனுக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர்.
விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் சுவாமியுடன் கோவிலை வலம் வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தன. தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர்- எம்.வி.எம். குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம்.வி.எம். குழும தாளாளர்-சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருது பாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல திருவேடகம் ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் கோவிலிலும், சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ விழா நடந்தது.