உள்ளூர் செய்திகள்
மாற்றுக் கட்சியினரை கவர்ந்த பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' பேச்சு
- மாற்றுக் கட்சியினரை கவர்ந்த பிரதமர் மோடியின் மனதின் குரல்.
- திருமங்கலம் தொகுதி காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி செல்வேந்திரன் பா.ஜ.க.வில் இணைந்தார்.
மதுரை
மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிகுமாரின் வன்னி வேலம்பட்டி கிராமத்தில் பிரதமர் மோடியின்
100-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இதனை அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் சுப்பலா புரம் சென்றார். அங்கு திருமங்கலம் தொகுதி காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி செல்வேந்திரன் பா.ஜ.க.வில் இணைந்தார். இதில் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் காளி தாஸ், மண்டல் தலைவர் சாமி ரங்கையா, துணை தலைவர் அய்யனார் கண்ணன், பொதுச் செயலாளர் கருப்பசாமி, நிர்வாகிகள் செல்வம், திருப்பதி, சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மேற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்பட 320 இடங்களில் பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒலிபரப்பானது .