உள்ளூர் செய்திகள்

பட்ட சாமி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-05-25 08:33 GMT   |   Update On 2023-05-25 08:33 GMT
  • மேலூர் அருகே பட்ட சாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கூத்தப்பன்பட்டி கிராமத்தில் உள்ள பிரான்மலை திருமலைசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி பிரான்மலை ராமசுப்பிரமணிய குருக்கள் தலைமையில் யாகசாலையில் இருந்து காப்புகட்டிய பக்தர்கள் புனித தீர்த்ததை எடுத்து சென்றனர். பின்னர் கோபுர கலசத்திற்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. கோவில் முன்பு நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை கூத்தப்பன்பட்டி பெரியஅம்பலம், சின்னஅம்பலம் வகையாறவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News