உள்ளூர் செய்திகள்

செல்போன் பறித்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றபோது எடுத்த படம்.

பயணிகளிடம் செல்போன் பறித்த வடமாநில வாலிபருக்கு தர்ம அடி

Published On 2023-08-30 08:39 GMT   |   Update On 2023-08-30 08:39 GMT
  • மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் பறித்த வடமாநில வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.
  • மாணவர்கள் திருடனை விரட்டிச் சென்றனர்.

மதுரை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தாராபட்டியை சேர்ந்தவர் ரவி. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரை சேர்ந்தவர் கருப்பையா. இவர்கள் நாள்தோறும் மதுரைக்கு வேலைக்காக வந்து செல்கின்றனர்.

அதன்படி இன்று காலை பெரியார் பஸ் நிலையம் வந்த 2 பேர் பஸ்சுக்காக காத்திருந்தனர். பஸ் வரும் வரை 2 பேரும் செல்போனை எடுத்து பார்த்துக் கொண்டி ருந்தனர்.

அப்போது அவர்களை வடமாநில வாலிபர்கள் நோட்டமிட்டதாக தெரிகிறது. அதில் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரவி, கருப்பையா கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கி ருந்து ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும் திருடன்...திருடன்... என கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள், மாணவர்கள் திருடனை விரட்டிச் சென்றனர்.

எல்லீஸ் நகர் பாலம் கீழ்ப்பகுதியில் பிடிபட்ட திருடனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து செல்போன்களை மீட்டனர். இதனைத்தொடர்ந்து அந்த வாலிபர் திடீர்நகர் போலீசில் ஒப்படைக்கப் பட்டார். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் பறிக்க அவருடன் மேலும் 4 பேர் வந்ததாக தெரிகிறது. அவர்கள் யார்? என்பது தொடர்பாகவும், வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பெரியார் பஸ் நிலையத்தில் நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

Tags:    

Similar News